நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து.

யாழ்  நல்லூர் பகுதியில் பற்றியெரிந்த ஐஸ்கிறீம் கடை.

யாழ்ப்பாணம்  நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள குறித்த கடையின் சமையல் அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக உடனடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.