வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படகு விபத்தில் மரணம்.

ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு கடந்த 03.12.2020ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9பேர் இறந்துள்ளனர் இதில் இலங்கையை சேர்ந்த இருவர் உள்ளடங்குவதாகவும் அவர்கள் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த ப.பிரசன்னா வயது-27 மற்றும் கோதண்ட நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் வயது-24 ஆகிய இருவரது உடல்கள் மொரோக்கோவில் உள்ள ‘லைவான்’ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்துக்குள்ளான படகில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்த காந்தன் இந்திரமோகன் என்பவரும் ஆவார்.
படகு விபத்தில் இறந்த இருவரது உடல்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகத்தின் ஊடாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உதவியை நாடியுள்ளார்கள் என தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.