கொரணாவால் குணமடைந்த நால்வர் கைது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் பூரணமாக குணடைந்த நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை புனானி கொரோனா சிகிச்சை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் உட்பட மேலும் சில பொருட்களை கொள்ளையடித்துச்செல்ல முற்பட்டவேளையிலேயே அவர்கள் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொம்பெனிதெருவை சேர்ந்த மூவரும், மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு வழைச்சேனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.