பிரதேச செயலாளர் விடுதி மீதான தாக்குதலுக்குக் கண்டனம்.

பிரதேச செயலாளர் விடுதி மீதான தாக்குதலுக்குக் கண்டனம்:

மாந்தை கிழக்கு பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்! 

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் விடுதி மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று காலை  கண்டனப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

கடந்த 10ஆம் திகதி மாந்தை கிழக்கு பிரதேச செயலரின் உத்தியோக தங்குமிட விடுதி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

“அரச அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த”, “பறிக்காதே பறிக்காதே அரச ஊழியர்களின் பாதுகாப்பைப்  பறிக்காதே”, “நினைக்காதே நினைக்காதே கல்லெறிந்து காரியம் சாதிக்க நினைக்காதே” போன்ற  வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளைத் தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதேவேளை, குறித்த பிரதேச செயலகத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த அதிகளவான ஊழியர்களே தங்கி நின்று  கடமையாற்றும் நிலையில் தங்குமிட விடுதி மீதான தாக்குதல் அச்ச உணர்வை  ஊழியர்கள் மத்தியில்  ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.