செட்டிகுளத்தில் வீடு தீயில் எரிந்து நாசம்.

செட்டிகுளத்தில் வீடு தீயில் எரிந்து நாசம். ஒரு வயது குழந்தை உள்ளிட்ட
மூவர் மயிரிழையில் தப்பினர்.

வவுனியா மாவட்டம், செட்டிகுளம், பயரிக்குளம் பகுதியில் வீடு ஒன்று இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அது தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டில் இருந்த தந்தை, தாய் மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோர் அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டபோதும் வீட்டில் இருந்த உடமைகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ விபத்துக்குரிய காரணம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.