விமான விபத்தில் 23 வயதான கெடட் அதிகாரி சாலிந்த அமரகோன் உயிரிழந்தார்

கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் ரூவான்வெல்ல மாபிட்டிய பிரதேசத்தில் வசித்த 23 வயதான பயிற்சி கெடட் அதிகாரி சாலிந்த அமரகோன் (23) உயிரிழந்துள்ளார்.

சீன உற்பத்தியான PT – 6 ரக விமானம் 2001 ஆம் ஆண்டு முதல் விமானப் படையினரின் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

விபத்து குறித்து ஆராய விமானப்படை தளபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் கூறியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த விமானியின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்து காணப்பட்டதாக திருகோணமலை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜகத் சந்ரத்ன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சீனக்குடாவில் இருந்து புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான PT – 6 ரக விமானம் கந்தளாய் சூரியபுரயில் உள்ள குளமொன்றுக்கு அருகில் விழுந்து இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாளானமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.