திருநெல்வேலி பொதுச் சந்தையில் 313 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை.

திருநெல்வேலி பொதுச் சந்தையில்
313 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள் 313 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்காக இன்று பெறப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஓர் அங்கமாகவே இன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் இன்றிரவு அல்லது நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.