மேலும் 8 பேருக்குக் கொரோனாத் தொற்று மருதனார்மடம் கொத்தணி பாதிப்பு 66 ஆக அதிகரிப்பு.

மேலும் 8 பேருக்குக் கொரோனாத் தொற்று மருதனார்மடம் கொத்தணி
பாதிப்பு 66 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சங்கானையைச் 4 பேரும், உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய் மற்றும் வடலியடைப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.