மருதனார்மடம் கொரோனா கொத்தணி 88 ஆக உயர்வு!  11 பேருக்குத் தொற்று உறுதி.

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 88 ஆக உயர்வு!
11 பேருக்குத் தொற்று உறுதி

யாழ். மருதனார்மடம் கொத்தணியில்  11 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகளுடன் நேரத் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி மருதனார்மடம் கொரோனா கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இன்றிரவு தெரிவித்தார்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 பேர், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் சண்டிலிப்பாய், இளவாலை, மல்லாகம், அளவெட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் அடங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 6 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் முல்லேரியா ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தியோரில் 2 பேருக்கு  தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே யாழ். போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 435 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டன.  அதில் 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.