சிவபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடு வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிவபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு அவர்கள் பயன்பாட்டுக்கு என புதிய வீடு  வழங்கி வைக்கப்பட்டது.

ஜீவ ஊற்று அன்பின் கரம் ஊடாக நியூசிலாந்து மக்கள் நல்வாழ்வு மையத்தின் உறுப்பினர்  ஜெயக்குமார்  இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தார்.

இவ் இல்லமானது பதினாறாவது ஜீவ ஊற்று அன்பின் இல்லம் என்பதுடன் மக்கள் நல்வாழ்வு மையத்தினர் வழங்கிய ஐந்தாவது இல்லமுமாகும்.

ஜீவ ஊற்று அன்பின் கரம் கிழக்கு மாகாண இணைப்பாளரும் உப தலைவருமான S.S சீலன் தலைமையில் மட்டக்களப்பு பணியாளர் திலீப், சாயி என்பவர்களுடன் திருகோணமலை மாவட்ட பணியாளர்கள் நாதன், அமுதாப் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.