பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்குள் வரும் அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த முடிவு நாளை (23) அதிகாலை 2 மணி முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை அமுலுக்கு வரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார்.

புதிய கொரோனா வைரஸின் மற்றொரு பாதிப்பு இங்கிலாந்தில் உருவாகி இருப்பதால் 20 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து பயணிகள் வருவதை ஏற்கனவே தடை செய்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.