இலங்கையில் கொரோனாவால் 15 வயது சிறுவனும் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவர் கொழும்பு தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.