வீதியால் சென்றவரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை.

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.

ஐயாத்துரை மோகனதாஸ் (வயது 47) என்பவரே கத்திக்குத்திற்கு இலக்கானார். அவர் காயத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.