இலங்கைக்கான ரஷ்ய விமானங்கள் இரத்து யுக்ரைன் பயணிகள் திங்கட்கிழமை வருகை.

இலங்கைக்கான ரஷ்ய விமானங்கள் இரத்து யுக்ரைன் பயணிகள் திங்கட்கிழமை வருகை.

 

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரவிருந்த விமானம் திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலால் மார்ச் மாதம் முதல் இன்றுவரை கட்டுநாயக்க, பலாலி மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எனினும், நாளை முதல் குறித்த விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

இதனிடையே முதலாவது சுற்றுலாக் குழுவொன்று ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரஷ்ய விமானங்கள் இலங்கைக்கான பயணங்களை இரத்துச் செய்துள்ளன என்று சிவில் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகமான ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாளைமறுநாள் திங்கட்கிழமை யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவித்திருக்கும் சுற்றுலாக்குழுவின் வருகை மாற்றுத் திட்டமின்றி நிச்சயமாக இடம்பெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.