கொழும்பில் நேற்று மட்டும் 300 பேருக்குக் கொரோனா.

கொழும்பில் நேற்று மட்டும்
300 பேருக்குக் கொரோனா.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதியில் இருந்து நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 86 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 300 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.