திறக்கப்பட்டது இரணைமடு; மக்களே மிக மிக அவதானம்.

திறக்கப்பட்டது இரணைமடு;
மக்களே மிக மிக அவதானம்.

வன்னியில் தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில் இரணைமடு வான்கதவுகள் இரண்டு இன்று திறக்கப்பட்டுள்ளன.

சம்பிரதாய நடைமுறைகளைத் தொடர்ந்து குளத்தின் இரண்டு கதவுகள் தலா 6 அங்குலம் அளவுக்கு திறக்கப்பட்டுள்ளன.

36 கொள்ளளவைக் கொண்ட குளத்தின் நீர்மட்டம் தற்போது 34 அடியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடுக் குளத்தின் கனகராயன் ஆற்றுப் படுக்கையில் உள்ள முரசுமோட்டை, கண்டாவளை, புளியம்பொக்கணை, ஊரியான், சிவபுரம், நாகேந்திரபுரம் உள்ளிட்ட தாழ் நில பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.