திருகோணமலை தாழ்நிலை பிரதேசங்கள், வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக மாவட்டத்தில் தாழ்நிலை பிரதேசங்கள், வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

திருகோணமலை நகரை அண்மித்த பகுதிகளில் கன்னியா,வரோதயநகர், புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேபோல் தம்பலகாமம்- கிண்ணியா முள்ளிப்பொத்தானை-வெருகல் போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் வீசப்பட்ட நெல் விதைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.