இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் மரணமடைந்தார்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது உலக அளவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இந்தியாவிலிருந்து இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று வந்த ஏ.ஆர்.ரகுமான் இசைத்துறையில் சாதிக்க முழுமுதற்காரணமும் அவரது தாயார் கரீமா பேகம் தான். ஏ.ஆர்.ரகுமான் இசைத்துறையை தேர்வு செய்யவும், இஸ்லாத்துக்கு மாறவும் காரணமாக இருந்த கரீமா பேகம் மீது ஏ.ஆர்.ரகுமான் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கரீமா பேகம் இன்று காலை உயிரிழந்தார். அவரது மரணம் குடும்பத்தாருக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. தனது தாயாரின் புகைப்படத்தை மட்டும் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருப்பதை அடுத்து திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.