யாழ். மாநகர மேயரானார் மணிவண்ணன்!ஒரு வாக்கால் தோல்வியடைந்தார் ஆனோல்ட்.

யாழ். மாநகர மேயரானார் மணிவண்ணன்! – ஒரு வாக்கால் தோல்வியடைந்தார் ஆனோல்ட்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் யாழ். மாநகர மேயர் தெரிவுக்காக மாநகர சபையில் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் மேயரானார்.

வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் போட்டியாளர் விஸ்வலிங்கம்  மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நால்வர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்குகொண்டு வாக்கெடுப்பில் பங்குகொள்ளாதவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்; மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.