உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சாரதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை.

யால தேசிய பூங்காவுக்கு நேற்று (02) உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற 27 சபாரி ஜீப் சாரதிகளையும் தனிமைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட விதி தங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்படவில்லை என்றும், சுற்றுப்பயணங்களை முடித்த பின்னரே தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் என இராணுவத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் சபாரி சாரதிகள் முறைப்பாடு கூறியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இந்த தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை அவர்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்த சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்க மாட்டோம் என்றும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.