புதிய ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

2021ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கண்டாவளை  பிரதேச செயலாளர் தலைமையில்  பிரதேச செயலகத்தின் முன்பாக  வெள்ளிக்கிழமை இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின்; உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது தொடர்ந்து நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு 2021ம் ஆண்டு புது வருடப்பிறப்பின் முதல் நாளில் அரச உத்தியோகத்தர்கள் கடமை தொடர்பிலான சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  தருமபுரம் சுகாதார வைத்திய அதிகாரியினால் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள்  உத்தியோகத்தர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.