வவுனியாவில் 938 குடும்பங்களை சேர்ந்த 4078 பேர் தனிமைப்படுத்தல்.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் 938 குடும்பங்களை சேர்ந்த 4078 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா பட்டானிசூர் பகுதியில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதில் அவருக்கு கொரனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பட்டாணிசூர் பகுதி பொலிசாரால் இன்று காலை தற்காலிகமாக முடக்கப்பட்டதுடன்
பொலிசார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பான விசாரணைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.