ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்குக் கொரோனா

மனித உரிமைகள் செயற்பாட்டாளர், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சி.ஐ.டியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று(07) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சி.ஐ.டியினரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.