முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரணா தொற்று.

முல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கு சென்ற கணவன் மனைவியில் மனைவிக்கு கொரோனா தொற்று 09.01.21 அன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நகரில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையினை வைத்துள்ள வண்ணாங்குளம் முல்லைத்தீவினை சேர்ந்தவர்கள் வவுனியாவில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் வவுனியாவில் உள்ள அண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சென்றுள்ளார்கள் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது வண்ணாங்குளத்தினை சேர்ந்த 30 அகவையுடைய குடும்ப பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..
இவர் தற்போது கிளிநொச்சி கொரோனா மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவரது கணவர் தனிமைப்படுத்ததப்பட்ட நிலையில் மாவட்ட மருத்துவமனையில் காணப்படுகின்றார்
இவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் பலர் பொது சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.