மழையுடனான சீரற்ற காலநிலை முல்லைத்தீவில் 18 குடும்பங்கள் பாதிப்பு.

சீரற்ற காலநிலை முல்லைத்தீவில் 18 குடும்பங்கள் பாதிப்பு, இரு வீடுகள் பகுதியளவில் சேதம்!
மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் 12 மணிவரை சேகரிக்கப்பட்ட தகவலிற்கு அமைவாக சீரற்ற வானிலை காரணமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 18 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை முள்ளியவளை மேற்கு கிராம சேவகர் பிரிவில் இரு வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.