ஐதேக கூட்டத்தை புறக்கணித்த ரவி கருணாநாயக்கவின் பதவி பறிப்பு : அகிலவுக்கு பதவி

கூட்டத்தைப் புறக்கணித்தமையால் ரவிக்கு வந்த வினை!

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக அகிலவிராஜ் காரியவசம் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று கூடியது. இதன்போது புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ரவி புறக்கணித்திருந்தார்.

இந்தநிலையிலேயே அவரிடமிருந்து உப தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.