உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கக் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சிக்குவாரா மைத்திரி?

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்கக் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி மார்ச் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு இந்த மனுக்களை விசாரணை செய்ய நேற்றுக் கூடிய 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முடிவு செய்துள்ளது.

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பால் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டிய போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதல்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.