தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் போது முகமூடிகள் கட்டாயமில்லை : போலீஸ் செய்தித் தொடர்பாளர்

தனியார் வாகனத்தில் பயணம் செய்யும் போது முகமூடி அணிவது கட்டாயமில்லை என போலீஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார். குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செய்யும் போது முகமூடி அணிவதும் கட்டாயமில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிற நபர் ஒருவரை தனியார் வாகனத்தில் அழைத்துச் கொண்டு செல்லும் சந்தர்ப்பங்களில் முகமூடி அணிவது கட்டாயமாகும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில், முகமூடி அணியாத நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் சமீபத்தில் கொழும்பில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.