சிறைக் கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 4,310 ஆக உயர்வு.

சிறைக் கொத்தணி தொற்றாளர்
எண்ணிக்கை 4,310 ஆக உயர்வு.

இலங்கையின் சிறைச்சாலைகளிலிருந்து மேலும் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

16 ஆண் கைதிகளும், சிறைச்சாலை அதிகாரி ஒருவருமே இவ்வாறு கொரோனாத் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் சிறைச்சாலைக் கொத்தணியில் சிக்கிய கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 310 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 123 சிறை அதிகாரிகளும், 3 ஆயிரத்து 945 கைதிகளும் பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 09 சிறை அதிகாரிகளும், 233 கைதிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.