இளைஞர்களிற்கு இராணுவபயிற்சியளிக்கும் யோசனை.சரத்வீரசேகர

இளைஞர்களிற்கு இராணுவபயிற்சியளிக்கும் யோசனையொன்றை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர முன்வைத்துள்ளார். தனது யோசனையை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒழுக்கம நிறைந்த சமூகத்தினை உருவாக்குவதற்கா 18 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு இராணுவபயிற்சியை வழங்கும் யோசனையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இராணுவபயிற்சி மூலமே சட்டத்தை மதிக்கும் ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தினை உருவாக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இராணுவபயிற்சி சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் இது குறித்து எவரும் அச்சப்படவேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.