முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்க நிதி உதவி கோருகின்றது மாணவர் ஒன்றியம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்க நிதி உதவி கோருகின்றது மாணவர் ஒன்றியம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் மாணவர் ஒன்றியம் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட நிலையில் மாணவர்களினதும் தாயகத்தின் புலம்பெயர் தேசங்களில் உள்ள ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் ஆதரவுகளாலும், போராட்டங்களாலும் மீண்டும் தூபி அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆகையினால் இந்தத் திட்டத்துக்கு நிதி தேவைப்படுவதால் இதற்கான நிதி உதவியை வழங்குமாறு அனைவரிடமும் மாணவர் ஒன்றியம் வேண்டி நிற்கின்றது .

இந்த நிதி உதவியைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக வைப்பிலிடுமாறும் வங்கிக்கணக்கு இலக்கத்தையும் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு மாணவர் ஒன்றியத்திடம் மாத்திரமே இந்த நிதி உதவியை வழங்குமாறும், வேறு இடங்களில் இதற்கான நிதி சேகரிக்கப்படவில்லை எனவும், ஏதேனும் சேகரிப்புக்கள் இடம்பெற்றால் அதற்கு மாணவர் ஒன்றியம் பொறுப்பில்லை எனவும் மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.