பதுளை – மடுல்சீமை பகுதியில் திடீரென நிலநடுக்கம்!

பதுளை – மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எக்கிரிய கிராமத்தில் இன்று அதிகாலை சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கைள விட சற்றுப் பலம் வாய்ந்ததாக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்று புவிச்சரிதவியல் ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 தொடக்கம் 4 மணிவரையில் மூன்று தடவை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

சுமார் மூன்று செக்கன்களுக்கு உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கங்கள் காரணமாக அப்பிரதேச மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

Leave A Reply

Your email address will not be published.