பிரதமர் சபாநாயகர் இன்று விசேட சந்திப்பு.

பிரதமர் சபாநாயகர் இன்று விசேட சந்திப்பு.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று காலை கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொண்டு எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தின் சரியான செயற்பாட்டைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தைப் பிரதமர், சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.