நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவொரு எம்.பிக்கும் கொரோனா தொற்றவில்லை. சபாநாயகர்

நாடாளுமன்ற வளாகத்தில் எந்தவொரு
எம்.பிக்கும் கொரோனா தொற்றவில்லை
சபாநாயகர் கூறுகின்றார்.

நாடாளுமன்ற வளாகத்தினுள் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத்தினுள் எப்போதும் கொரோனா அவதான நிலை இருந்ததில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர்கள். அவ்வாறு சென்றபோது தொற்று ஏற்பட்டிருக்கலாமே தவிர நாடாளுமன்ற வளாகத்தில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.