முச்சக்கரவண்டி 180 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி.

பெரகல கீழ் பிளக்வூட் பகுதியில் விபத்து ஒருவர் பலி!

பெரகல கீழ் பிளக்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி 180 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில் 28 வயது ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இவர் பெரகல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

பெரகல நகரத்தில் மீன் வியாபாரியான இவர் பெரகலயிலிருந்து வீடு செல்லும்போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.