இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் : அமெரிக்கா

இலங்கையில் கோவிட் 19 வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா அலுவலகம் ட்விட்டர் செய்தியில் கோவிட் தொற்றுநோயால் இறக்கும் மக்களுக்கு சர்வதேச சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகள் ஆகியவற்றின் படி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவ்வாறு செய்வதன் மூலம், மக்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பாரம்பரியமாக தங்கள் உறவினர்களிடம் விடைபெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது.

Leave A Reply

Your email address will not be published.