விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்காக யப்பானிய நிதியுதவியில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் அவர்களினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அழைப்பின் பேரில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஸ்ர பேராசிரியர் சம்பத் அமரதுங்க,கல்வி அமைச்சின் செயலாளர் சிரேஸ்ர பேராசிரியர் கே.கபில சி.கே பெரேரா மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பிரசன்னத்தில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் இலங்கைக்கான யப்பானிய தூதுவர் மான்புமிகு அகிரா சுகியாமா அவர்களினாலும் இவ் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதி வைபவரீதியாக இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.