யாழ் புதிய பேருந்து நிலைய மொழி முதலிடம்.

யாழ் புதியபேருந்து நிலைய மொழி முதலிடம் மற்றும் எழுத்து பிழைகள் திருத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27ம் திகதி யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைக்கப்பட்ட நெடுந்தூர புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இப்பேருந்து நிலையத்தில் இடங்களுக்கான பெயர்பலகையில் தமிழுக்கு இரண்டாவது இடம் வழங்கப்பட்டும், பெயர் பலகையில் “பேரூந்து” எனவும் அச்சிடப்பட்டு காணப்பட்டது.

அது பின்னர் பெருமளவில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கபட்டிருந்தது.

10 நாட்களின் பின்னர் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின் உத்தரவின் அடிப்படையில் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் அவர்களின் மேற்பார்வையில் யாழ் தனியார் பேருந்து நிலையத்தில் தமிழ் மொழிக்கு முதலிடமும் வழங்கப்பட்டு,
“பேரூந்து” என்னும் சொல்லில் உள்ள எழுத்து பிழையும் திருத்தப்பட்டு புதிய பெயர் பலகைகள் மாட்டப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.