இலங்கையில் மேலும் 9 பேர் மரணம்! – கொரோனா காவு 365 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 9 பேர் சாவடைந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

6 ஆண்களும், 3 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – 15 ஐச் சேர்ந்த 95 வயதான ஆண் ஒருவர், அநுராதபுரத்தைச் சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர், குருநாகல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர், நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர், கொழும்பு 12 ஐச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர், யாழ். ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர், ஹொரணைப் பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர், குருதெனியப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆண் ஒருவர், மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.