புதுப்பெண் கொலை, போலீசில் சிக்கிய காதலன், ரயிலில் பாய்ந்த காதலி..!

தெலங்கானா மாநிலம் மண்டல் மாவட்டத்தின் அய்யாவரிகுடும் கிராமத்தைச் சேர்ந்தவர் நவ்யா ரெட்டி (22). பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவருக்கும், மண்டலத்தில் உள்ள பாகிலபாடு கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர் நாகசேசு ரெட்டிக்கும் கடந்த டிசம்பரில் திருமணம் நடந்தது.

இதையடுத்து இருவரும் கோத்தலங்கப்பள்ளியில் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று மனைவியைக் காணவில்லை என்று யெருபாலம் போலீசில் நாகசேசு ரெட்டி புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை முடுக்கிய போலீசார், நவ்யா ரெட்டியின் செல்போன் எண்ணை வைத்தும், சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கொண்டு தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, முத்தகுடெம்-குப்பெனகுந்த்லா கிராமங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், நாகசேசுவும், நவியாவும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்தது.

இதனால் நாகசேசு ரெட்டி மீது சந்தேகம் ஏற்படவே, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்தான் நவ்யாவை கொலை செய்துவிட்டு, காணவில்லை என்று பொய்யான புகாரை அளித்தது தெரிய வந்தது. இதையடுத்து, குக்கலகுட்டா மலைப்பகுதிகளில் சிதைந்த நிலையில் இருந்த நவ்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சென்னை பேஷன் டெக்னாலஜி மாணவிக்கு அதிர்ச்சி..! சேலம் மார்பிங் ரோமியோ கைது…

தொடர்ந்து நாகசேசுவிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருமணத்துக்கு முன்பு நாகசேசுவும், யெருபாலியம் பகுதியைச் சேர்ந்த வீனிலா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் நாகசேசு நவ்யாவை திருமணம் செய்துள்ளார். காதலியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை செய்துகொண்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த நாகசுசு நவ்யாவை கொலை செய்துவிட்டு, காதலியுடன் வாழலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

இந்த திட்டத்துக்கு நாகசேசு காதலி வீனிலாவும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று, நவ்யாவை குக்கலகுட்டா மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார் நாகசேசு. அப்போது, குளிர் பானத்தில் தூக்க மாத்திரிகளை கலந்து நவ்யாவுக்கு குடிக்க கொடுத்துள்ளார். அது தெரியாமல் குளிர்பானத்தை குடித்த நவ்யா சற்று நேரத்தில் மயங்கியுள்ளார்.

உடனே அவரது துப்பட்டாவை எடுத்து நவ்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்த நாகசேசு, மலைப்பகுதியில் இருந்து நவ்யாவின் உடலை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் நவ்யாவின் செல்போனில் இருந்து அவரது தந்தைக்கு, ” பொறியியல் படிக்க முடியாமல் போனதால், நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் அப்பா” என்று நவ்யாவே அனுப்புவது போல மெசேஜை அனுப்பியுள்ளார்.

மேலும், மனைவியை காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையில், நாகசேசு போலீசில் சிக்கிக்கொண்ட விவகாரம் தெரிய வந்ததும், அவரது காதலி வீனிலா கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொண்டலகோபரம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், நாகசேசு மீது கொலை, தடயங்களை அழித்தல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்த போலீசார் நாகசேசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.