P2P பேரணிக்கு தெற்கு உள்ள ஊடகங்கள் முன்னுரிமையளிக்கவில்லை : அமெரிக்க தூதர் குற்றம் சாட்டுகிறார்

தமிழ் கட்சிகள் இணைந்து நடத்திய பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி குறித்த தகவல்களை வடக்கில் உள்ள தமிழ் ஊடகங்கள் வழங்கியிருந்தாலும், கொழும்பு சார்ந்த ஊடகங்கள் அதற்கு ஏன் பரவலான தகவல்களை வழங்கவில்லை என தெற்கு ஊடகங்களிடம்  அமெரிக்க தூதர் திருமதி தாமஸ் டெப்லெட்ஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதை அவர் தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

“அமைதியான போராட்டங்கள் எந்தவொரு ஜனநாயகத்தினதும் முக்கியமான உரிமை. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடந்த ஒரு தமிழ் பேரணியைக்  கண்டேன். ஆனால் இது ஏன் கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்களால் பரவலாக மறைக்கப்பட்டது என நான் ஆச்சரியப்பட்டேன். ” என தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.