இலங்கையில் மேலும் நால்வர் மரணம்! கொரோனாச் சாவு 379 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் நால்வர் மரணம்! கொரோனாச் சாவு 379 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் சாவடைந்துள்ளனர்.

கொழும்பு – 05 ஐச் சேர்ந்த 83 வயது ஆண், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 70 வயது பெண், கொழும்பு – 13 ஐச் சேர்ந்த 42 வயது பெண் மற்றும் கண்டி – உடத்தலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.