கிழக்கில் களமிறங்க தயாராகும் ஸ்ரீரங்கா!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்களை இணைத்துக் களம் இறங்கவுள்ளதாக பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரங்காவின் தேர்தல் அணிக்கு கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்ட போதிலும் அதற்கு ஊடகவியலாளர்கள் மறுப்புத் தெரிவித்துவிட்டனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 19ஆம் திகதி குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாலும் தற்போதுதான் தகவல்கள் ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.