இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 329 ஓடங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா அபாராமாக ஆடினார். ஆனால் மறு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன.

சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து இந்த அணிக்கும் இந்திய அணி இரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்தனர். துணை கப்டன் ரகானே(67 ரன்கள்) ஓரளவு சிறப்பாக ஆடினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்து இருந்தது.

2ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் அக்சர் படேல் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. எனினும், அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். ஆனால், மறு முனையில் யாரும் நிலைத்து நிற்காததால் இந்திய அணி 95.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 35 ஓட்டங்களை பெற்று மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.