BJP கட்சியை இலங்கையில் உருவாக்க சட்டத்தில் இடமுமில்லை : பிரதீபா மஹாநாமா

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியை கிளை ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு சட்டத்தில் எவ்வித இடமும் இல்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் இலங்கையில்  பாரதிய ஜனதா கட்சியை கிளை ஒன்றை ஆரம்பிக்க போவதாக  அறிவிப்பொன்றை  விடுத்துள்ளமையின் பின்னணியில் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸில் இருக்கலாம் என அவர் சந்தேகம் வௌியிட்டார்.

மேலும் கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விடயமும் காரணமாக இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான அறிவிப்பானது காலணித்துவ ஆட்சிக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளதென பிரதீபா மஹாநாமா கூறியுள்ளார்.

இந்தியாவின் இந்த அறிவிப்பானது இலங்கை நாட்டின் ஜனநாயகம் மற்றும் உள் விவகாரங்களில் தலையிடுவதாக அமையுமென அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.