சீனாவால் இலங்கை ஆக்கிரமிப்பு. சந்திரிகா கடும் சீற்றம்.

சீனாவால் இலங்கை ஆக்கிரமிப்பு.சந்திரிகா கடும் சீற்றம்.

சீனாவால் இலங்கை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, தற்போதைய ராஜபக்ச அரசின் வெளிவிவகாரக் கொள்கை நாட்டை அழிவுப் பாதைக்கே கொண்டுவந்துவிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

விஜயகுமாரதுங்கவின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள அவரது சமாதியில் இன்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே சந்திரிகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“முன்னாள் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்பிய இந்த நாடு இப்போது மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கின்றது. இந்தநிலையிலிருந்து முன்னேறிச் செல்ல முடியாத நிலையில் நாடு உள்ளது.

படித்த, ஊழலற்ற இளைய தலைமுறையைச் சேர்ந்த அரசியல்வாதிகளே இன்று நாட்டுக்குத் தேவையாகவுள்ளனர். இந்த அரசின் வெளியுறவுக் கொள்கை அழிவுப் பாதைக்கே நாட்டைக் கொண்டு சென்றிருக்கின்றது.

இலங்கை இன்று சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. சீனா மீது எனக்கு எந்தவிதமான கோபமும் இல்லை. ஆனால், இந்த நாட்டில் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.