நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை.

அறிமுக இயக்குநர் எம்எஸ் ஆனந்தன் இயக்க, விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘சக்ரா’. இந்த படத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 19 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கியுள்ளதாக இயக்குனருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷால், இயக்குனர் ஆனந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக சக்ரா படம் கடந்த ஆண்டு மே மாத ரிலீசுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்தசூழலில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் படம் ரீலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது பிப்ரவரி 19 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.