திருமலை எரிப்பொருள் தாங்கிகள் விரைவில் இலங்கை வசமாகும்!

திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை நாட்டுக்கே திருப்பிப் பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வவிடயத்தில் இலங்கை முன்வைத்த அனைத்து நிபந்தனைகளுடனும் இந்திய உயர்ஸ்தானிகர் உடன்பட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

2017 இல் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தாங்கள் வழங்கிய நிபந்தனைகளுக்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.