மேலும் 13 பேரை பலியெடுத்த கொரோனா! இன்றும் 713 பேருக்குத் தொற்று.

மேலும் 13 பேரை பலியெடுத்த கொரோனா! இன்றும் 713 பேருக்குத் தொற்று.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இன்றும் 713 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 747 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றில் இருந்து இதுவரை 72 ஆயிரத்து 178 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 321 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.