கிளிநொச்சி : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில் !

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (20) 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இருந்தும் இதற்கான நீதி இதுவரை கிடைக்காமையினால் சர்வதேசத்திடம் நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தீச்சட்டி போராட்டம் கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நிறைவடையவுள்ளது.

தற்போது கிளிநொச்சி பகுதியில் மழை பெய்து வரும் நிலையிலும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.